நவீனமடையும் கட்டுமானத் துறையில் திறன் வளர்ச்சிக்கு $72 மில்லியன் நிதி

சிங்கப்பூரில் கட்டுமானத் துறை, ஊழியர்களை அதிகம் சார்ந்திருப்­பதைவிட்டு அறிவார்ந்த நடைமுறை­ களைக் கடைப்பிடிக்க உதவ $72 மில்லியன் மதிப்பிலான பயிற்சி நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையில் திறன்­களை மேம்படுத்த உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிதி, மாணவர்களுக்கும் பெரியவர்களுக்குமான உபகாரச் சம்பளம் மற்றும் நிதி வழங்கும் திட்டங்களுக்கு கைகொடுக்கும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்­கழகத்தில் நேற்று நடைபெற்ற 'iBuildSG' உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து­கொண்டு பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் முதல் 2020ஆம் ஆண்டு மே வரை ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியால் கட்டுமானத் துறையில் பணிபுரியும் கட்டடக்கலை நிபுணர்கள் உட்பட 118,000 உள்ளூர் ஊழியர்கள் பலனடையக்கூடும்.
"சிங்கப்பூர் உட்பட உலகம் முழுவதும் கட்டுமானத் துறை அதிவேகமாக மாறி வருகிறது," என்று கூறினார் திரு வோங்.
இருப்பினும் போக்குவரத்து, நிதி போன்ற துறைகளில் நிலவும் மாற்றங்களைவிட கட்டு­மானத் துறையில் மாற்றங்களின் வேகம் குறைந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

படம்: சாவ் பாவ்


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!