புதிய தொழில்நுட்பங்களைச் சமாளிக்க ‘ஏஐ’ கட்டமைப்பு

புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விவகாரங்களை நிறுவனங்கள் சமாளிப்பதற்கு சிங்கப்பூர் மாதிரி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகப் பொருளியல் மாநாட்டில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இக்கட்டமைப்பை வெளி யிட்டார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தனியார் துறை அமைப்புகளுக்கு இக்கட்டமைப்பு, விளக்கமான வழிகாட்டி குறிப்புகளை வழங்கும்.
அவ்வகையில் இதுவே ஆசியாவின் முதல் கட்டமைப்பு என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
மின்னிலக்கப் பொருளாதாரத் தில் அதிவிரைவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இக்கட்டமைப்பும் மாற்றம் கண்டு வரும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
மனிதனின் அறிவு தேவைப்படும் பணிகளுக்குக் கணினி நிரல்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு.
பேசுவதை அடையாளம் காண்பது, முடிவெடுப்பது, மொழி பெயர்ப்பு செய்வது போன்றவை இதில் அடங்கும்.
சிங்கப்பூரின் மாதிரி கட்டமைப்பு இரு கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எடுக்கப்படும் ஒரு முடிவு, பயனீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடியதாக, தெளிவாக, நியாயமாக அமைவது அக்கொள்கைகளில் ஒன்று.
படம்: உலகப் பொருளியல் மாநாடு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!