சீனப் புத்தாண்டை முன்னிட்டு 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காக சிங்கப்பூர் பவர் (எஸ்பி) குழுமம் சிறப்பு அன்பளிப்புப் பைகளை நேற்று வழங் கியது. எஸ்பி குழுமத்தின் கிட் டத்தட்ட 300 தொண்டூழியர்கள், வசதி குறைந்த குடும்பங்களுடனும் முதியோருடனும் அடிக்கடி தங்கள் நேரத்தைக் கழிப்பதுடன் வளங்களையும் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். நன்கொடையாகப் பெறப்பட்ட அரிசி, 'மைலோ', உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்ட பொட்டலங்களைத் தயாரித்து எஸ்பி குழுமத்தின் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வசதி குறைந்தோருக்கு விநி யோகமும் செய்தனர். தொண்டூழியர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் போன விஸ்தா, கேலாங் பாரு, பொங்கோல் நார்த், தெம்பனிஸ் வெஸ்ட், தோ பாயோ, உட்குரோவ், இயோ சூ காங் ஆகிய வட்டாரங்களில் வசிப்போருக்குப் பொட்டலங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
2,300 குடும்பங்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்புகள்
1 mins read
தலைமை நிர்வாக அதிகாரி வொங் சிட் சியங் (இடக்கோடி), எஸ்பி ஊழியர் கிளேடிஸ் லாய் (வலக்கோடி), திருவாட்டி ஃபிரான்சிஸ்கா கேத்தரினுடனும் அவருடைய குடும்பத்தாருடனும் உரையாடினர். சிங்கப்பூர் பவர் -

