ஈசூனில் கலவரம்; ஆறு பேர் கைது

கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.ஈசூன் ஸ்திரீட் 72 புளோக் 745ன் கீழ்த்தளத்தில் சென்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவரை ஒரு கும்பல் திடீரென தாக்கியதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

தாக்கப்பட்ட 21 வயது ஆடவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலிசார் வருவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் சம்பவ இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆறு சந்தேக நபர்களின் அடையாளத்தை விசாரணையின்மூலம் உறுதி செய்தனர். ஜனவரி 18ஆம் தேதி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலிஸ் விசாரணை தொடர்கிறது. கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!