டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

இரண்டு டாக்சி ஓட்டுநர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்ச்சண்டை வன்செயலாக மாறியது.
அந்த இருவரில் ஒருவர், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பூச்சுமருந்து திரவம் இருந்த ஒரு டப்பாவைக் கொளுத்தி, தீ மற்றோர் ஆடவரின் மீது படும்படி செய்துவிட்டார்.
அதனால் லாம் சூன் சாய், 61, என்பவருக்கு இடது காது, கன்னம், கழுத்தில் மேலோட்டமாகத் தீப்புண் ஏற்பட்டது.
தாக்கியதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இங் சூன் கிம், 65, என்ற டாக்சி ஓட்டுநருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 18 மாத காலம் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
காயப்படுத்தியதற்காக திரு லாமுக்கு $115 இழப்பீடு கொடுக்கும்படியும் இங்கிற்கு உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவம் 2017 மே 1ஆம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு விவோசிட்டி டாக்சி நிறுத்தத்தில் நிகழ்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!