பல பகுதிகளில் மின்தடை

சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் நேற்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் தடைப்பட் டது. பீஷான், தோ பாயோ, ‌ஷுன்ஃபூ ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். மின்தூக்கிகளும் போக்கு வரத்து விளக்குகளும் செயல்பட வில்லை. பாதிக்கப்பட்ட பகுதி களுக்குப் பிற்பகல் 2.58 மணிக்கு மின்சாரம் முற்றிலும் மறுபடியும் கிடைத்துவிட்டதாக எஸ்பி குழுமம் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற் பகல் 3.19 மணிக்குத் தெரிவித்தது. மின்தடை பிற்பகல் 1.30க்குத் தொடங்கியது. அங் மோ கியோ, பீஷான், சின் மிங், தாம்சன் ஆகி யப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

பிற்பகல் 1.46 மணி முதல் மின் சாரம் கட்டம் கட்டமாக அப்பகுதி களுக்குக் கிடைத்தது. மின்தடை ஏற்பட்டதுமே உடன டியாக அதிகாரிகள் செயலில் இறங்கியதாகவும் கூடுமானவரை விரைவில் மின் விநியோகத்தை மீண்டும் வழக்கநிலைக்கு வரச் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்து வதே முதல் காரியமாக இருந்தது என்றும் எஸ்பி குழுமம் தெரிவித் தது. பிரைட் ஹில் பகுதியில் இருக் கும் துணை மின்நிலையம் ஒன் றில் மூண்ட தீ தான் மின்தடைக் குக் காரணம் என்பது பூர்வாங்க புலன்விசாரணை மூலம் தெரிய வந்தது.2

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!