இறக்குமதி வரி தீர்வை, பொருள் சேவை வரி ஆகியவற்றைச் செலுத்தாமல் சுங்கை ஜூரோங் வழியாக 3,740 பெட்டிகளில் கடத்த முயன்ற சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள்; எஞ்சிய 14 பேரும் இந் தோனீசியர்கள் என்று சிங்கப்பூர் சுங்கத் துறையும் போலிசும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்டவர்கள் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
அந்த சிகரெட்டுகளுக்கான இறக்குமதித் தீர்வை $396,200, ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி $28,820 என மதிப்பிடப்பட்டுள்ளது.