சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றதற்காக சியூ எங் ஹானுக்கு 13 மாதச் சிறை

சட்டவிரோதமாக சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றதற்காக சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் முன்னைய தலைவர்களில் ஒருவரான சியூ எங் ஹானுக்கு இன்று 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் விதிக்கப்பட்டிருந்த மூன்றாண்டு நான்கு மாதச் சிறைத்தண்டனையை முடித்த பின்னர் அவர் இந்தத் தண்டனையை நிறைவேற்றவேண்டும். வெளியேறுவதற்கான அதிகாரபூர்வ இடமாக இல்லாத ஒரு இடத்திலிருந்து சியூ, 58, சிங்கப்பூரைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியதாக கடந்தாண்டு டிசம்பரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க சியூ, கடந்தாண்டு பிப்ரவரி 21ஆம் தேதிப் புலாவ் உபின் படகுத்துறையிலிருந்து படகில் ஜோகூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவரை கடற்காவல் அதிகாரிகள் இடைமறித்து கைது செய்தனர். நீதியைத் திசைத்திருப்ப சியூ முயன்றதாக மாவட்ட நீதிபதி விக்டர் இயோ தீர்ப்பளித்தார்.

சிட்டி ஹார்வஸ்ட் வழக்கில் தனக்கு நியாயம் வழங்கப்பட்டவில்லை என்று நினைத்ததால் சிங்கப்பூரைவிட்டு வெளியேற முடிவு செய்திருந்ததாக சியூ, தன்னை விசாரித்த அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து தலைவர்கள், நிதி தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் உறுதிச் செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!