தெம்பனிஸ் ஸ்திரீட் 43, புளோக் 440ல் வசிக்கும் 62 வயது திருவாட்டி ஜமிலா, தமது வீட்டில் வழக்கத்திற்கு மாறான துர்நாற்றம் வீசியதை உணர்ந்தார். அவர் வீட்டைச் சோதனையிட்டதில் படுக்கை அறையின் கூரையிலிருந்து கருஞ்சிவப்பு நிறத் திரவம் கசிந்து இருப்பதையும் அதிலிருந்தே துர்நாற்றம் வந்ததையும் அறிந்தார்.
அது ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அவர், தமது மருமகனிடம் கூறி போலிசிடம் தகவல் கூறச் சொன்னார். போலிஸ் சோதனையின்போது மாதின் வீட்டுக்கு மேல்வீட்டில் 77 வயது ஆடவர் ஒருவர் தரையில் உணர்வின்றி கிடந்ததைக் கண்டனர். அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிசெய்தனர். முதியவர் ஒரு வாரம் முன்னதாகவே இறந்து விட்டதாக வான் பாவ் சீன நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சம்பவம் குறித்துத் தங்களுக்கு நேற்று காலையில் தகவல் கிடைத்ததாகக் கூறிய போலிஸ், முதியவரின் மரணத்தை இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தி விசாரணை நடத்துகின்றனர்.
தெம்பனிஸ் வீட்டில் தனியாக இறந்து கிடந்த 77 வயது முதியவர்
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 15:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!