மலைப்பாம்பு கடித்த ஆடவர் குணமடைந்து வருகிறார்

ஆர்ச்சர்ட் ரோட்டில் 'டேங் பிளாசா' கடைத்தொகுதிக்கு அருகில் காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்றைப் பிடிக்கச் சென்ற 'என்டிசிமெக்ஸ்' பூச்சுக்கட்டுப்பாட்டு நிறுவனம், தங்களது ஊழியர்கள் குறித்து பொதுமக்கள் காட்டிய அக்கறைக்காக நன்றி தெரிவித்திருக்கிறது. பாம்பைப் பிடிக்கச் சென்ற நிறுவன ஊழியர்கள் ஐவரில் ஒருவரை அந்தப் பாம்பு கடித்ததைத் தொடர்ந்து அவருக்காக இணையவாசிகள் பலர் தங்களது அக்கறையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

காயமடைந்த ஆடவரின் சதையிலிருந்து அந்தப் பாம்பின் பல் ஒன்றை எடுப்பதற்கு லேசான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார். அந்த ஆடவர் தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக 'என்டிசிமெக்ஸ்' நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

பாம்பைக் கட்டுப்படுத்திய ஊழியர்களின் நிர்வாகி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பாம்புகளைக் கையாள்வதற்கான பயிற்சியைப் பெற்றவர் என்றும் அந்நிறுவனம் கூறியது. இருந்தபோதும் பாம்பு தவறாகக் கையாளப்பட்டது என்ற புகாரைப் பெற்றதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெறும் என்று ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!