சந்தேகப்பேர்வழிகள் 117 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, ஜனவரி 21 முதல் நேற்று வரை எடுத்த நாடு தழுவிய நடவடிக்கைகளில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மொத்தம் 280 கிராம் ஐஸ், 13 கிராம் ஹெராயின், 27 கிராம் கஞ்சா, 2,234 எரிமின்-5 மாத்திரைகள், 41 எக்ஸ் டசி மாத்திரைகள் ஆகியவை சோதனையில் பிடிபட்டன.
சிங்கப்பூர் போலிஸ் உதவியுடன் பிடோக், புவாங்கோக், புக்கிட் பாத்தோக், காமன்வெல்த், ஜூரோங், பாசிர் ரிஸ், சிராங்கூன், தெம்பனிஸ், ஈசூன் ஆகிய பகுதிகளில் சோதனை நடந்தது. புலன்விசாரணை நடப்பதாக இந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் ஜனவரி 28ஆம் தேதி ஒரு தம்பதியைப் பிடித்தனர். சிங்கப்பூரர்களான அந்தத் தம்பதியர் தங்கள் 10 மாத கைக்குழந்தையுடன் அங்கும் இங்கும் மாறிமாறி போலிசிடமிருந்து தப்பி வந்தனர்.
அத்தம்பதியரில் ஒருவரான 31 வயது மாது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப் படுகிறது. போலிசிடம் அந்தத் தம்பதியர் பிடிபட்டபோது அவர்களின் கைக்குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது. அதிகாரிகள் அந்தக் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!