அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அறைகலன் கடை ஒன்றில் தீ மூண்டது. எண் 135 அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு முகவரியில் செயல்பட்டு வந்த அந்தக் கடை நேற்றுக் காலை தீயில் பாதிக்கப் பட்டுவிட்டது.
அந்தக் கடையில் அதிகாலை 3.33 மணிக்குத் தீ மூண்டதாக தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பல பதிவுகளில் தெரிவித்தது.
கடையில் மூண்ட தீயை அணைப்பதில் 11 அவசரகால வாகனங்களும் சுமார் 35 தீய ணைப்பாளர்களும் ஈடுபட்டனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இரண்டு மணி நேரத்தில் அந்தத் தீ அணைக்கப்பட்டதாக வும் மேற்கொண்டும் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்ததாகவும் சிங் கப்பூர் தற்காப்புப் படை தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக அப்புறப்படுத்தப்பட்ட குடி யிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக் குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
தீ மூண்டதை அடுத்து குடி யிருப்பாளர்கள் பலரையும் போலி சாரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் அப்புறப்படுத்தினர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. விபத்துக்கான காரணம் பற்றி குடிமைத் தற்காப்புப் படை புலன்விசாரணை நடத்துகிறது.
இதனிடையே, இந்தத் தீ விபத்து பற்றி தெரிவித்த ராய்ஸ்ட் டன் எஸ்ட்ரோப், 68, என்பவர், கரும் புகை கிளம்பியதை அடுத்து தன் மனைவி தூங்கிக்கொண் டிருந்த தன்னை எழுப்பிவிட்டதாகக் கூறினார்.
அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அறைகலன் கடையில் அதிகாலை நேரத்தில் மூண்ட தீ
3 Feb 2019 01:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!