இந்தோனீசியாவைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் ஒருவர், வன்முறையைத் தூண்டக்கூடிய பதிவுகளைத் தமது கைபேசியில் அடிக்கடி பார்த்து வந்ததைக் கண்டறிந்த அவரது முதலாளி, அது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் தெரியப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது.
ஆயுதம் ஏந்திய வன்முறையை ஆதரித்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களது சொந்த நாட்டிற்கு அண்மையில் திருப்பி அனுப்பப்பட்ட ஐந்து இந்தோனீசிய பணிப்பெண்களில் அவரும் ஒருவர்.
சுய தீவிரவாதப் போக்கிற்கு ஆளாகும் இல்லப் பணிப்பெண்கள் தொடர்பிலான இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தாம் முன்னதாக கேள்விப்பட்டிருந்ததால், அந்தப் பணிப்பெண்ணின் நடவடிக்கைகளை அவரது முதலாளி கண்டறிய முடிந்ததாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
"தம்மிடம் ஓராண்டுகாலமாக பணிபுரிந்து வந்த அப்பணிப் பெண்ணின் நடத்தையில் மாற்றங்கள் தென்பட்டதைக் கண்டறிந்த முதலாளி கவலையடைந்தார்.
"குறிப்பாக, வன்முறையைச் சித்திரிக்கும் காட்சிகளைத் தமது கைபேசியில் அப்பணிப்பெண் அடிக்கடி பார்த்து வந்ததை அவரது முதலாளி கவனித்தார்," என்று அப்பேச்சாளர் சொன்னார்.
சிரியா, மியன்மார், பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் ஆயுதம் ஏந்திய வன்முறையை அப்பணிப்பெண் ஆதரித்ததாகவும் தாம் ரசித்த போராளிகள் சிலருடன் இணையத்தில் நண்பரான தாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
ஆனால், அப்பணிப்பெண் குறித்த மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. போரால் பாதிக் கப்பட்ட அப்பகுதிகளுக்கு அவர் செல்ல விரும்பியதாகவும் தெரி விக்கப்பட்டது.
பயங்கரவாதச் சித்தாந்தங்களை போதிப்பவர்களின் காணொளியை யும் அதுதொடர்பான மற்ற பதிவுகளையும் பார்த்த பிறகு அப்பணிப்பெண் தீவிரவாதப் போக்கிற்கு ஆளானதாக விசார ணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இங்கு வன்முறைச் செயல்களை மேற்கொள்ள அப்பணிப்பெண்ணுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்றாலும், அவரது முதலாளி இது குறித்து தெரியப்படுத்தியதால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய மிரட்டல்களை முறியடிக்க முடிந்ததாக உள்துறை அமைச்சு கூறியது.
கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட சிங்கப்பூர் பயங்கரவாத மிரட்டல் மதிப்பீட்டு அறிக் கையின்படி, 2015ஆம் ஆண்டில் இருந்து சுய தீவிரவாதப் போக்கிற்கு ஆளான 14 இல்லப் பணிப் பெண்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இங்குள்ள வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களிடம் சுய தீவிரவாதப்போக்கு தொடர்ந்து நிலவு வதாக அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டிருந்தது.
சுய தீவிரவாதப் போக்கை நாடிய இல்லப் பணிப்பெண்
5 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!