சிறார்களுடன் பாலியல் உறவுகொண்ட பிரெஞ்சு மொழி ஆசிரியர் கைது 

சிங்கப்பூர் கல்வியமைச்சின் மொழிக் கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய பிரெஞ்சு ஆடவர், சிறார்களுடன் பாலியல் உறவு கொண்டதன் தொடர்பில் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 51 வயது ஜோன் கிறிஸ்தொஃப் குவெனொ, சிறுவர் ஒருவருடன் இருந்தபோது போலிசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஜோன், பேங்காக்கிலுள்ள ஹுவே குவாங் விளையாட்டரங்கில் சிறுவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆங்கிலம், காற்பந்து ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்க முற்பட்டதாக தாய்லாந்தின் நகர போலிஸ் தலைவர் மேஜர் ஜெனரல் செனிட் தெரிவித்தார். பின்னர் ஜோன் இந்தச் சிறுவர்களில் சிலருக்குப் பணம் கொடுத்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மேஜர் ஜெனரல் செனிட் கூறினார். ஜோன் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இவ்வாறு செய்து வந்ததாகவும் அவர் சொன்னார். "கல்வி அமைச்சு தனது ஊழியர்களின் முறைகேடான நடத்தையைக் கடுமையாகக் கருதுகிறது. எங்களது நன்னடத்தைக் கோட்பாட்டுக்கு இணங்கி நடக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம். சம்பவங்கள் கடுமையாக இருந்தால் தொடர்புடையவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம். இந்த விவகாரம் குறித்து தாய்லாந்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்," என்று கல்வி அமைச்சு 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!