தெம்பனிசில் உள்ள கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கோவில் ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடமும் கிட்டத்தட்ட 30 சிலைகளும் பெரும் சேதமடைந்தன. அதிகாலை மூன்று மணிக்கு நெருப்பு பற்றியதாக கோவில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துகொண்டது.
தீச்சம்பவம் குறித்து காலை 6.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நெருப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அது விசாரணை மேற்கொண்டுள்ளது. அத்துடன் நாளை பொறியியலாளர்கள் கோவில் கட்டமைப்பைச் சோதிக்கவுள்ளதாக கோவில் பேச்சாளர் தெரிவித்தார். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றாலும் வழிபாட்டுப் பீடமும் அதைச் சுற்றியுள்ள இடமும் சாம்பலாகிவிட்டதாக கோவில் நிர்வாகக் குழு பெரும் வருத்தத்துடன் தெரிவித்தது.
நெருப்பில் சேதமடைந்த சில சிலைகள் கோவில் போன்று பழமை வாய்ந்தவை என்று கோவில் தொண்டூழியர் ஒருவர் கூறினார். சம்பவத்தைப் பற்றி அறிந்த பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தீச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் கிட்டத்தட்ட $300,000க்கும் $400,000க்கும் இடைப்பட்ட தொகை என மதிப்பிடப்படுகிறது.
தெம்பனிஸ் கோவில் தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடம், சிலைகள் சேதம்
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 08:50

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சிண்டா உன்னத விருது விழா 2023

சிண்டா உன்னத விருது விழா 2023

சிங்கப்பூரில் தங்கத்தின் விலை சரிவு

புதுப்பொலிவுடன் காட்சிதருகிறது தேக்கா நிலையம். புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் முதல் தளம் இன்று திறப்பு.

உயரும் மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள்.

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!