தெம்பனிஸ் கோவில் தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடம், சிலைகள் சேதம்

தெம்பனிசில் உள்ள கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கோவில் ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடமும் கிட்டத்தட்ட 30 சிலைகளும் பெரும் சேதமடைந்தன. அதிகாலை மூன்று மணிக்கு நெருப்பு பற்றியதாக கோவில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துகொண்டது.
தீச்சம்பவம் குறித்து காலை 6.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நெருப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அது விசாரணை மேற்கொண்டுள்ளது. அத்துடன் நாளை பொறியியலாளர்கள் கோவில் கட்டமைப்பைச் சோதிக்கவுள்ளதாக கோவில் பேச்சாளர் தெரிவித்தார். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றாலும் வழிபாட்டுப் பீடமும் அதைச் சுற்றியுள்ள இடமும் சாம்பலாகிவிட்டதாக கோவில் நிர்வாகக் குழு பெரும் வருத்தத்துடன் தெரிவித்தது.
நெருப்பில் சேதமடைந்த சில சிலைகள் கோவில் போன்று பழமை வாய்ந்தவை என்று கோவில் தொண்டூழியர் ஒருவர் கூறினார். சம்பவத்தைப் பற்றி அறிந்த பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தீச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் கிட்டத்தட்ட $300,000க்கும் $400,000க்கும் இடைப்பட்ட தொகை என மதிப்பிடப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!