சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்த முயற்சியின் விளைவாக வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு பெரும் நன்மை அடைந்தது.
சிங்கப்பூர் போலிஸின் 'வைட் கோலர் கிரைம் யுனிட்' பிரிவு, பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்குகளைப் பின்தொடர்ந்து $27 மில்லியனுக்கும் மேலான பணத்தை மீட்டுள்ளது.
சீனாவின் ஆகப் பெரிய மோசடி திட்டத்தைச் சார்ந்த பணம் இது.
இந்த மோசடி திட்டம் 1.15 மில்லியன் நபர்களைப் பாதித்து, ஏறத்தாழ 38 பில்லியன் யுவான் (சிங்கப்பூர் $7.7 பில்லியன்) இழப்பை உண்டாக்கியது.