பாதுகாப்பு அக்கறைகள் தவிர்த்த சுற்றப்புற மதிப்பீடுகள் வெளியிடப்படும்

பாதுகாப்பு அக்கறைகள் தவிர்த்த சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் மதிப்பீடுகளை வெளியிட அரசாங்கம் தயாராக உள்ளது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய பூங்காக்கள், இயற்கைப் பாதுகாப்புப் பகுதிக ளுக்கு அருகில் உள்ள கட்டுமானப் பணிகள் சுற்றுப் புறத்தைப் பாதிக்கும் மதிப்பீடுகளைக் கட்டாயமாக வெளி யிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்குமா என்று நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் இங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
ராணுவப் பயிற்சித் தளத்துக்கு அருகில் உள்ள தெங்கா காடுகளுக்குக் குறைவான பாதுகாப்பு முக்கியத்துவம் உள் ளது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்ததை அடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பொது வீடமைப்புக்குரிய இடமாகத் தேர்வு பெற்றிருக்கும் சிங்கப்பூரின் முதலாவது 'காட்டு நகரான' தெங்கா பகுதி யின் பாதுகாப்பு குறித்த தரவுகளைத் தவிர்த்த முழு அறிக்கையைப் சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளியிடுமா? என்று திரு இங் கேட்டார்.
இது குறித்து பேசிய அமைச்சர் லீ, "தெங்காவைப் பொறுத்தவரையில், சுற்றுப்புறவியல் அடிப்படை ஆய்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஊடகத் திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அது குறித்த விவரங்கள் இயற்கை ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கப்படும். ராணுவப் பயிற்சித் தளமாக உள்ள தெங்கா பகுதி அதன் நிலையை என்றும் பெற்றிருக்கும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!