உந்து நடமாட்ட சாதன சட்டவிரோத பயன்பாடு: 600க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்

உந்து நடமாட்ட சாதனத்தை சாலைகளில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்காகச் சென்ற ஆண்டு சராசரியாக மாதத்திற்கு 51 பேர் பிடிபட்டுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டின் முதல் 11 மாதத்தில் இந்த சராசரி எண்ணிக்கை 40ஆக இருந்தது.
சென்ற ஆண்டில் பிடிபட்ட 616 பேரில் சுமார் 110 சம்பவங்கள், அதாவது 18 விழுக்காடு, தனியார் வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள சிறிய சாலைகளில் நடந்துள்ளன.
பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் பதிலளித்தார்.
உந்து நடமாட்ட சாதனங்களைச் சாலைகளில் ஓட்டுவது சட்ட விரோதச் செயலாகும். சிறிய சாலைகளில் பயன்படுத்தி முதல் முறை பிடிபடுவோருக்கு $300 அபராதமும் பிரதான சாலைகளில் பயன்படுத்துவோருக்கு $500 அபராதமும் விதிக்கப்படும்.
போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளிலும் பொதுமக்கள் புகார் செய்யும் இடங்களிலும் நிலப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் அமலாக்க நடவடிக்கை களை மேற்கொள்கிறது என்றார் மூத்த துணை அமைச்சர்.
உந்து நடமாட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோர் பாதசாரிகள் மீது மோதி விபத்து நேர்ந்தால் இரு சாராரும் சிங்கப்பூர் சமரச மையத்திற்கோ சிங்கப்பூர் வழக் கறிஞர் சங்கத்திற்கோ சமரச பேச்சுவார்த்தைக்குச் செல்லலாம்.
ஆனால் இரு அமைப்புகளும் இதுவரை இதன் அடிப்படையிலான சம்பவங்களைக் கையாளவில்லை என்று திருவாட்டி லீ பீ வாவின் கேள்விக்கு டாக்டர் லாம் பதிலளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!