பயணிகளின் வருகை 2018ல் புதிய உச்சத்தை எட்டியது

பயணிகளின் வருகை 2018ல் புதிய உச்சத்தை எட்டியது

1 mins read

உலகளவில் சிங்கப்பூர் மீதான கவனம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகளின் வருகையும் அவர்கள் செலவிட்ட பணமதிப்பும் சென்ற ஆண்டு அதிக அளவிற்கு உயர்ந்து உள்ளது. பயணிகளின் மொத்த வருகை 6.2 விழுக்காடு உயர்ந்து 18.5 மில்லியனாக பதிவானது. முன்னுரைக்கப்பட்ட எண்­ணிக்கையைவிட அது கணி­ ச­மாக அதிகம். சீனா, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் இருந்து வந்த அதிகமான பயணிகளின் எண்ணிக்கை அதற்கு உதவி­ யது. அவர்கள் செலவு செய்த மொத்த தொகை 1 விழுக்காடு உயர்ந்து $27.1 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க மதிப்பீடு­களை சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் நேற்று வெளியிட்டது. உலகின் கவனம் சிங்கப்பூர் மீது ஈர்க்கப்படுவதற்கு இரண்டு முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.