சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வசதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு தாக்கப்படுவது பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றாலும், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்கிறது என்றார் அவர். பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவசரகால தயார்நிலையை வலுப்படுத்தவும் அதி காரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக டாக்டர் ஜனில் சொன்னார். "அதிகமானோர் காயமடைய, அல்லது இறக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் பொதுப் போக்குவரத்து வசதிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காக உள்ளன," என்ற அவர், உலகளவில் கடந்த இரு ஆண்டுகளில் பயணிகள், ரயில்கள் மீது தாக்குதல் அரங்கேற்றப்பட்டதைச் சுட்டினார்.
சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்
1 mins read

