பண்ணை உரிம விதிமுறைகளை மீறிய ஆடவருக்கு அபராதம்

பண்ணை உரிம விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) அபராதம் விதித்துள்ளது. 'காய் ஹொங் எக்வடிக்ஸ்' நீர்விலங்குப் பண்ணையின் உரிமையாளர் 58 வயது திரு டோ கே ஹோங்கிற்கு $1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்ணை நிலத்தின் தவறான பயன்பாடு பற்றி பொதுமக்களில் ஒருவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து 'ஏவிஏ', சிங்கப்பூர் நில ஆணையம், மனிதவள அமைச்சு ஆகியவை இணைந்து அந்தப் பண்ணை வளாகத்தில் சோதனை நடத்தின. பண்ணையில் பெரிய குப்பைத் தொட்டிகள் பல (skip tanks) இருந்ததாகச் சோதனை நடத்திய அதிகாரிகள் கண்டனர். மேலும், பண்ணை ஊழியர்கள் அல்லாத இரண்டு வெளிநாட்டினர் அங்கு தங்கி வந்ததாகவும் அறியப்பட்டது.

சிங்கப்பூரின் நிலப் பற்றாக்குறையால் பண்ணைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பண்ணை தொழிலுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படவேண்டும் என்றது ஏவிஏ. ஏவிஏயின் பண்ணை விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்..

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!