ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஒன்பதாம் மாடி வீட்டில் தீப் பிடித்துக்கொண்டதால், அங்கிருந்து கிளம்பிய புகையை முகர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 221ல் மூண்ட தீச்சம்பவம் பற்றி காலை 9.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டில் சமையலறை, வரவேற்பறை ஆகியவற்றில் உள்ள பொருட்களில் தீப் பிடித்துக்கொண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சிறிது நேரத்தில் தீ அணைக்கப் பட்டது. "புகையை அதிகமாக முகர்ந்ததால் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்," என்று அது கூறியது.
அந்த நபர் பாதிக்கப்பட்ட வீட்டின் குடியிருப்பாளர் என்று அறியப்படுகிறது. தீச் சம்பவம் குறித்த விசாரணையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தொடங்கியுள்ளது.
ஈசூன் வீட்டில் தீ: புகையை முகர்ந்த குடியிருப்பாளர் மருத்துவமனையில்
15 Feb 2019 09:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2019 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!