ஈசூன் வீட்டில் தீ: புகையை முகர்ந்த குடியிருப்பாளர் மருத்துவமனையில்

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஒன்பதாம் மாடி வீட்டில் தீப் பிடித்துக்கொண்டதால், அங்கிருந்து கிளம்பிய புகையை முகர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 221ல் மூண்ட தீச்சம்பவம் பற்றி காலை 9.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வீட்டில் சமையலறை, வரவேற்பறை ஆகியவற்றில் உள்ள பொருட்களில் தீப் பிடித்துக்கொண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சிறிது நேரத்தில் தீ அணைக்கப் பட்டது. "புகையை அதிகமாக முகர்ந்ததால் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்," என்று அது கூறியது.
அந்த நபர் பாதிக்கப்பட்ட வீட்டின் குடியிருப்பாளர் என்று அறியப்படுகிறது. தீச் சம்பவம் குறித்த விசாரணையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தொடங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!