பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் சிங்கப்பூர் கடற்பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று மூழ்கியிருப்பதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
டோமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 'ஓஷியன் கூப்பர் 2' எனும் விநியோகக் கப்பல் நேற்று முன்தினம் காலையில் பெட்ரா பிராங்கா தீவுக்கு மூன்று கடல்மைல்களுக்கு அப்பால், சிங்கப்பூர் நீரிணையில் மூழ்கியது என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியது.
சிங்கப்பூர் நீரிணை உலகின் மிக பரபரப்பான கப்பல் மண்டலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் மூழ்கிய செய்தி ஆணையத்துக்கு காலை 7.15 மணிக்குக் கிடைத்தது.
கப்பலில் இருந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த சிப்பந்தி கள் மூவரைக் காயமின்றி காப்பற்றியது அதன் அருகில் சென்ற 'ஜாலி ரேச்சல்' எனும் விநியோகக் கப்பல். இவ்விரு கப்பல்களும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவை. கப்பல் மூழ்கிய இடத்தில் எவ்வித எண்ணெய் கசிவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரணை நடத்துகிறது.
பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மூழ்கியது
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!