7,700 பேருக்கான சாஸ் மானியம் கணக்கீடு தவறு

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டைக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங் களில் விண்ணப்பித்த அல்லது புதுப் பித்த சுமார் 7,700 பேர் சரியாகக் கணக்கிடப்படாத சுகாதாரப் பராமரிப்பு மானியங்களைப் பெற்று இருக்கிறார்கள். கணினி முறையில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. என்சிஎஸ் நிறுவனம் நிர்வகித்து நடத்தும் கணினி முறை, அந்த 7,700 பேருக்கு உரிய மானியங்களைத் தவறாகக் கணக்கிட்டுவிட்டது என்று அமைச்சு விளக்கியது. இந்த எண்ணிக்கை, சாஸ் அட்டை வைத்துள்ள அனைவரோடும் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 17% ஆக இருக் கிறது. அட்டைகளுக்காகவும் அட்டை களைப் புதுப்பிப்பதற்காகவும் செய்யப் பட்ட விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மானியங்கள் நேற்று சரிப்படுத்தப்பட்டு விட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதச் செயலையும் செய்யவேண்டிய தேவை இல்லை என்றும் அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!