கனமழை, பலத்த காற்று - சாலையில் விழுந்த மூன்று மரங்கள்

அப்பர் தாம்சன் ரோட்டில் நேற்று பிற்பகல் கனமழை பெய்ததைத் தொடர்ந்து பல்வேறு மரங்கள் விழுந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) பிற்பகல் சுமார் 4.45 மணிக்கு, குறைந்தது ஒரு மரம் கார் ஒன்றின் மீது விழுந்ததாக அதனை நேரில் கண்ட ஒருவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகையிடம் தெரிவித்தார். அந்நேரத்தில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈசூனை நோக்கிச் செல்லும் சாலையில் விழுந்துகிடந்த ஒரு மரம், சாலையின் மூன்று தடங்களில் இரண்டை இடைமறித்ததால் போக்குவரத்து பாதிப்படைந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. அந்தச் சாலையில் அந்நாளில் குறைந்தது மூன்று மரங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஊழியர்கள் சாலையைச் சுத்தம் செய்து அங்கு விழுந்திருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளிவரவில்லை. மரங்கள் எதனால் விழுந்தன என்பதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!