வெளியுறவு அமைச்சு: புதிய சர்ச்சைகளால் பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டது

சிங்கப்பூரின் தலைமைச்சட்ட அதிகாரிக்கும் மலேசியாவின் தலைமைச்சட்ட அதிகாரிக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்திருப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் விலை குறித்த இரு நாடுகளின் நிலைப்பாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கலந்துரையாடல் தேவைப்படுவதாக இரு நாடுகளின் பிரதமர்களும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக அமைச்சு கூறியது.

ஆயினும், மலேசியாவுடன் கடந்த ஆண்டு டிசம்பர் நடத்தப்பட்ட சந்திப்பின்போது புதிய சர்ச்சைகள் ஏற்பட்டதாகவும், அதனால் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது. ஜோகூர் பாருவின் துறைமுக எல்லை, சிலேத்தார் விமான நிலையத்தின் தரையிறங்கும் முறை ஆகியவை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்ததை அமைச்சு சுட்டியது.

சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் விலை குறித்த பேரப்பேச்சுகள் கடந்த மாதம் நிகழ்ந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் சயிஃபுடின் அப்துல்லா தெரிவித்ததன் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அவ்வாறு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!