சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை தற்போதைக்கு அதிகம் உயராது என்று 'கெப்பிடாலேண்ட்' தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரூ லிம் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் வீட்டு விலை 5 விழுக்காடு உயர்ந்தாலே அது மிக நல்லது என்று அவர் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஆண்டு சொத்துச் சந்தைமீது விதித்திருந்த கட்டுப்பாட்டின் விரிவும் கடுமையும் முதலீட்டாளர்களை வியப்படையச் செய்ததாகத் திரு லிம் சொன்னார். சொத்து விற்பனை நடவடிக்கைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் முத்திரை வரியை அதிகரித்ததுடன் கடன் நிபந்தனைகளையும் மேலும் கடுமையாக்கியது.
2018ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் தனியார் வீட்டு விலை தொடர்ந்து குறைந்து வந்தது.