சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இருவர் கைது

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு பேர் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று கைதுசெய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் படையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

சிங்கப்பூரை நோக்கி வந்துகொண்டிருந்த மரப்படகு ஒன்றுக்குள் 16 வயது சிறுவனும் 21 வயது ஆடவரும் இருந்ததை கடற்காவல் படை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பிடிபட்டவர்களில் 21 வயது ஆடவருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனையுடன் நான்கு பிரம்படிகள் விதிக்கப்பட்டன. 16 வயது சிறுவன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டான். இருவரும் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கப்படுவதாக போலிஸ் படையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!