உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாகக் கடன்வழங்கும் தொழிலில் ஈடுபட்ட முன்னாள் கட்டுமானத் துறை நில அளவீட்டாளருக்கு நேற்று மூன்றரை ஆண்டுகள் சிறையும் $450,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிலை 2006ஆம் ஆண்டிலிருந்து செய்துவந்த மலேசிய நாட்டவரான 47 வயது லூய் டெக் ஹோக் 2017ல் பிடிபட்டார். அப்போது ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் மற்றவர்களின் நான்கு வங்கி அட்டைகளை வைத்திருந்திருந்தை அதிகாரிகள் ஆராய்ந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டார்.
குறைந்தது 83 பேருக்கு22 தடவைகள் உரிமம் இல்லாமல் கடன்வழங்கும் தொழில் செய்ததன் பேரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான லூய் கட்டுமானத் துறையில் பணி புரிந்தபோது 2006ல் சட்ட விரோதமாகக் கடன்வழங்கத் தொடங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியா, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, 10% வரை மாத வட்டியில் கடன் வழங் கியுள்ளார். கடன்வாங்கியவர் களிடம் ஏடிஎம் அட்டைகளையும் அவற்றின் மறைச்சொற்களையும் கடனாளி களிடம் வாங்கிவிடும் அவர், அவர்களுக்கு சம்பளம் வந்ததும் தமது கடன்தொகையை அவர்கள் கணக்கிலிருந்து எடுத் துக்கொண்டு மீதிச் சம்பளத்தை அவர்களிடம் கொடுப்பார்.
உரிமமின்றி கடன் வழங்கும் தொழில் செய்தவருக்கு சிறை, அபராதம்
21 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 07:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!