சட்டவிரோத கடல் எரிசக்தி எண்ணெய் பரிமாற்றம் தொடர்பாக 22 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஜூரோங் தீவு கடற்பகுதியில் அவர்கள் கரையோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கடற்துறை சேவை வழங்கும் ஒரு படகில் அறுவர் கைதுசெய்யப்பட்டனர்.
இரண்டு மெட்ரிக் டன் கடல் எரிசக்தி எண்ணெய்யை திருடியதாக நம்பப்படும் இவர்கள் மீது இன்று நம்பிக்கை மோசடி குற்றம் சாட்டப்படும். இயந்திரப் படகு மாலுமிகளான மற்ற ஐவர் மீது திருட்டுப் பொருளை வாங்கியதற்காக இன்று குற்றம் சாட்டப்படும்.