பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமர் கொண்டாட்டம்

பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19ஆம் தேதி) இஸ்தானா அதிபர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடத்தினார்.

முன்னோடித் தலைவர் ஓங் பாங் முன், முன்னைய நாடாளுமன்ற நாயகர் டான் சூ கூன் ஆகியோருடன் முன்னைய அமைச்சர்கள் எஸ் தனபாலன், அகமது மாத்தார், லிம் ஹுவீ ஹுவா உள்ளிட்டோரும் விருந்தில் கலந்துகொண்டனர். அவர்களுடன், முன்னைய நாடாளுமன்றச் செயலாளர்கள் மைதீன் பணிக்கர், ஹவாசி டைப்பி மற்றும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. செல்வதுரை, ஹோ கியோக் சூ ஆகியோரும் வருகையளித்தனர்.

இவர்களைக் கௌரவிக்க பிரதமர் லீயுடன் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், கல்வி அமைச்சர் ஓங் யீ காங் உள்ளிட்ட தற்போதைய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியின் படங்களைத் திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இவர்கள் பல ஆண்டுகளாகச் சேவையாற்றியுள்ளனர். இவர்களில் பலர் தொடர்ந்து சமூகத்திற்குப் பங்காற்றி வருகின்றனர். அவர்களது நட்புக்கும் தோழமை உணர்ச்சிக்கும் எனது நன்றி," என்று திரு லீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!