தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற 38 வயது ஆடவர் ஒருவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவர் 16ஆம் தேதி) பிடிபட்டார். அந்த ஆடவர் ஐந்து சிகரெட் பெட்டிகளை ரொட்டித் துண்டுக்குள் பதுக்கி தனது மோட்டர் சைக்கிளின் கூடைக்குள் வைத்திருந்ததைக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டனர்.
மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கப்படுவதாக ஆணையம் கூறியது.