வேலையிட மரணங்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு சற்று குறைந்து 41 மரணங்கள் ஆனது. இது 2017ம் ஆண்டின் எண்ணிக்கையான 42 மரணங் களைவிட ஒன்று குறைவு.
இந்த எண்ணிக்கை ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது என்று மனிதவள அமைச் சும் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
வேலையிடப் பாதுகாப்பு மற் றும் சுகாதாரச் சட்டம் 2006ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து வேலையிட மரணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
2006ஆம் ஆண்டில் 3.1 புள்ளியாக இருந்த வேலையிடத் தின் மரணத்தை விளைவித்த காயங்களின் விகிதம் 2018ஆம் ஆண்டில் 1.2 புள்ளியாகக் குறைந்தது. இந்த வித்தியாசம் 60 விழுக்காட்டுக்கும் அதிகம்.
பாதுகாப்பு விளைவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரங்கள், கடுமையான தண்டனைகள், தொழில்துறைகளுக்கு பாது காப்பு தொடர்பான விரிவான விளக்கங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் ஒவ்வொரு நிறுவன மும் அதன் பாதுகாப்பு விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வைத்த அணுகுமுறையினால்தான் இந்த மேம்பாடுகளைச் சாதிக்க முடிந் தது என்று அறிக்கையில் கூறப் பட்டது.
வேலையிடமரணங்கள் 2018ல் சற்று குறைவு
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!