'மேஜர்-ஜெனரல்' மர்வின் டானுக்குப் பிறகு சிங்கப்பூர் ஆகாயப் படையின் தலைவராக 'பிரிகேடியர்-ஜெனரல்' கெல்வின் கோங் பூன் லியோங் மார்ச் 22ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார் என்று தற்காப்பு அமைச்சு இன்று தெரிவித்தது.
2016ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதியிலிருந்து 46 வயது 'மேஜர்-ஜெனரல்' டான் சிங்கப்பூர் ஆகாயப் படையை வழிநடத்தினார். 1990ஆம் ஆண்டில் அவர் சிங்கப்பூர் ஆகாயப் படையில் சேர்ந்தார். அவர் பல்வேறு மூத்த பொறுப்புகளை வகித்து சிறப்பாகச் செயல்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.