ஜூரோங் வெஸ்ட் வீவக வீடு ஒன்றில் நேற்று முன்தினம் பின்னிரவு நேரம் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் கிட்டத்தட்ட 90 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52, புளோக் 517ஏ வீடு ஒன்றில் மூண்ட தீ குறித்து பின்னிரவு 1.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது. 12ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. நெருப்பின் புகையை உள்ளிழுத்ததற்காக ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 60 வயது மதிக்கத்தக்க இருவரும் தீ மூண்ட வீட்டில் வசித்து வந்தவர்கள் என்று வான்பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது. கட்டடத்தின் 11ஆவது மாடி முதல் 16ஆவது மாடி வரையில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் நாளிதழிடம் தெரிவித்தார். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜூரோங் வெஸ்டில் தீ; புளோக்கின் 90 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
25 Feb 2019 09:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2019 09:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!