சிங்கப்பூரில் ஈரறை நீக்குப்போக்கு வீடுகளை வாங்கும் மூத்தோரில் 10 பேரில் ஒன்பது பேர் குறைந்த கால குத்தகையுடன் கூடிய வீடுகளையே விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இவ் வாறு தெரிவித்து இருக்கிறது. அத் தகைய வீடுகளுக்கு இன்னாள் வரை முன்பதிவு செய்துள்ள 16,169 பேரில் 54 விழுக்காட்டினருக்கு வயது 55 மற்றும் அதற்கும் அதிகம் என்றும் கழகம் தெரி வித்துள்ளது.
ஈரறை நீக்குப்போக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு வாங்கும் 55 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோர் 15 முதல் 45 ஆண்டுகள் வரை குத்தகைக் காலத்தைக் கொண்டுள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இந்தத் திட்டம் 2015 நவம்பரில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் வீடு களுக்கு முன்பதிவு செய்துள்ள மற்றவர் களில் குடும்பங்கள் மற்றும் ஒற்றையர் அடங்குவர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஆகப் புதிய விற்பனையில் 5,000க்கும் மேற்பட்ட அரசாங்க அடுக்குமாடி வீடு கள் கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வீடுகளுக்கு விண்ணப்பித்த 8,700 மூத்தோர்களில் 91% அதாவது 7,959 பேர் குறைந்த குத்தகைக் காலத்துடன் கூடிய வீடுகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
2,545 பேர் 40 ஆண்டுகால குத்தகை வீடுகளையே விரும்புகிறார்கள் என்று கழகம் தெரிவித்து இருக்கிறது.
35 ஆண்டுகால குத்தகையுடன் கூடிய வீடுகளை விரும்பியவர்கள் 2,154 பேர் என்றும் 1,344 பேர் 30 ஆண்டுகால குத்தகையை விரும்பு கிறார்கள் என்றும் கழகம் தெரிவித்தது. 15 ஆண்டுகால குத்தகையுடன் கூடிய வீடுகளை தேர்ந்தெடுத்தவர்கள் 139 பேர் என்றும் கழகம் குறிப்பிட்டது.
இதனிடையே, காலாங் வாம்போ, தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய பகுதி களில் மேலும் ஈரறை நீக்குப்போக்கு வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படும் என்றும் கழகம் தெரிவித்துள்ளது. இவை வரும் மே மாதம் கிடைக்கும்.
குறைந்தகால குத்தகை வீடே மூத்தோர் விருப்பம்
25 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2019 10:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!