சிங்கப்பூர் கடற்பகுதி விவகாரம் குறித்து வேறு நாட்டு அரசாங்கம் அதிகாரம் செய்ய சிங்கப்பூர் அனு மதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இம்மாதம் 9ஆம் தேதியன்று பிற்பகல் 2.28 மணிக்கு துவாசுக்கு அப்பால் உள்ள சிங்கப்பூரின் கடற் பகுதியில் 'போலாரிஸ்' என்ற மலேசியக் கப்பல் மீது 'பிராயஸ்' எனும் கிரேக்கக் கப்பல் மோதியது தொடர்பில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தெசேரா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விவியன் இவ்வாறு பதிலளித்தார்.
'பிராயஸ்' தனது அடுத்த துறைமுகமான ஜோகூரில் உள்ள தஞ்சோங் பெலபாசுக்குச் செல்ல சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது மோதல் சம்பவம் நிகழ்ந்தது.
அனைத்துலக கடல்துறை அமைப்பின் விபத்து விசாரணை குறியீட்டின்படி, இம்மோதல் சம் பவத்தை ஒரு மோசமான கடல் துறை விபத்தாகக் கருதாததால் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அந்த கிரேக்கக் கப்பலை அடுத்த துறைமுகத்திற்
குச் செல்ல அனுமதித்தது என அமைச்சர் விளக்கினார்.
அத்துடன் கிரேக்கக் கப்பல் சிங்கப்பூர் கடற்பகுதியில் இருந் ததால் மலேசிய அரசாங்கம் அதைக் கைப்பற்றவில்லை என்றும் அவர் சொன்னார்.
மலேசியக் கடல்துறைக்குச் சொந்தமான 'போலாரிஸ்' எல் லைப்பகுதியையும் பாதுகாப்பு அபாயங்களையும் குறிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
வேறு அரசாங்கம் அதிகாரம் செய்ய அனுமதிக்கப்படாது
27 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2019 09:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!