பெண்களுக்கான அங்கீகாரம் 

இருநூற்றாண்டு நிறைவு போன சின் ஓர் அங்கமாக மத்திய சேமநிதிக் கணக்கில் நிரப்பப் படவுள்ள $1,000 தொகை, வீட்டில் இருந்து குடும்பங்களைப் பார்த்துக் கொண்ட பெண்களுக்கான அங்கீ காரம் என்று நேற்று நாடாளுமன்றத் தில் மனிதவள அமைச்சர் ஜோசஃ பின் டியோ கூறினார்.
பிறர் வேலைக்குச் சென்றபோது இப்பெண்கள் தங்கள் குடும்பங் களைக் கவனித்துக்கொண்டதற்கு அடையாளமாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
பணிஓய்வுக்குத் தேவைப்படும் பணத்தைச் சேமிக்க இவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த காலகட்டம் இருந்ததை அவர் சுட்டினார்.
வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும்போது ஆண், பெண் போன்ற பாகுபாட்டின் அடிப்படை யில் எந்த ஒரு முடிவையும் எடுக்காவிட்டாலும் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டமும் குறிப்பிடத் தக்க வழிகளில் பெண்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் அமை யும் என்றார் அவர்.
சென்ற வாரம் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.
இதன்படி மத்திய சேமநிதிக் கணக்குகளில் குறைவான தொகையைக் கொண்டுள்ள 50 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப் பட்ட சிங்கப்பூரர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக அதிகபட்சம் $1,000 வரை அவர்களது மசே நிதிக் கணக்குகளில் அரசாங்கம் பணம் நிரப்பும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!