பாட அடிப்படையில் தரம்  பிரிக்க அமைச்சிடம் கோரிக்கை

மாணவர்களை வழக்கநிலை, விரைவு என தரம் பிரிப்பதை விடுத்து, பாடங்களின் அடிப்படை யில் தரம் பிரிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நேற்று மாலையில் தொடங்கியபோது, இதுகுறித்து அவர்கள் பேசினர்.
இதுநாள் வரையில் தரம் பிரிப்பு என்பது சிங்கப்பூர் கல்வித் துறையில் மாற்றமுடியாத ஓர் அம்சமாக இருந்துவந்துள்ளது என்று கூறிய ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா, இது மாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

கல்விக்கான நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் திருவாட்டி டெனிஸ் புவா, பாட அடிப்படையிலான தரம் பிரிப்பு இதற்கு நல்ல தீர்வாக அமையும் என்றார். அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு அறிமுகமான மாணவர்கள் பாடங் களை வெவ்வேறு நிலைகளில் படிக்க உதவும் முறை ஆக்ககர மான விளைவுகளைத் தந்துள்ள தாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் கல்வித் திட்டத்தில் 1980ஆம் ஆண்டு நல்ல நோக்கத் துடன் மாணவர் தரம் பிரிப்பு முறை அறிமுகம் கண்டது. ஒவ்வொரு மாணவரும் தங்கள் திறனுக்கு ஏற்ற நிலையில் கல்வி கற்க இந்த முறை உதவியது என்றார் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு அங் வெய் நெங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!