சிங்கப்பூர்-மலேசியா ரயில்திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை  

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரு ரயில் திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிறகு கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தின் அடுத்த கட்டம் பற்றி மலேசியாவிடமிருந்து எவ்வித பரிந்து ரையும் கிடைக்கவில்லை என்று டாக்டர் விவியன் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
மலேசியாவின் விருப்பப்படி, இரு தரப்புகளும் 2020ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை அதிவேக ரயில் திட்டத்தை ஈராண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கமுடிவு செய்தன. அந்த வகையில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட் டின்படி மலேசியா, $15 மில்லியனை திட்டத்தை திடீரென நிறுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது.
"இந்த இடைப்பட்ட காலத்தில், அதிவேக ரயில் திட் டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிகளை இருதரப்பு களும் ஆராயலாம் என்று மலேசியா யோசனை கூறியது. ஆனால், இதுவரை அதன் தொடர்பில் எவ்வித பரிந்துரை களும் இல்லை," என்று அமைச்சர் சொன்னார்.
சிங்கப்பூரையும் ஜோகூர் பாருவையும் இணைக்கும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி பாதை விரிவாக்கத் திட்டத்திலும் மலேசியத் தரப்பிடமிருந்து எவ்வித பரிந்துரை யும் கிடைக்கவில்லை. இதனால் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தொடங்கப்படவிருந்த எம்ஆர்டி ரயில் திட்டமும் தாமதமாகலாம் என்றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!