ஓடும் டாக்சியிலிருந்து விரைவுச் சாலையில் வெளியேறிய பயணி

டாக்சி ஓட்டுநர் மயக்கநிலையை அடைந்ததால், தடுமாறிய டாக்சியிலிருந்த பயணி நடுச்சாலையில் இறங்கினார். ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை பகல் 1.10 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம்வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்புக்கோரிய கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம், டாக்சி ஓட்டுநர் சிறிது நேரம் மயக்கமடைந்ததாக நேற்று கூறியது. சுயநினைவுக்கு வந்த ஓட்டுநர் தம் பயணி வாகனத்திலிருந்து இறங்கி விட்டதை உணர்ந்ததாகவும், பின்னர் விரைவுச்சாலையை விட்டு வெளியேறி மருத்துவ உதவி நாடியதாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது டாக்சி ஓட்டுநரின் உடல்நிலை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்பில் டாக்சியிலிருந்து வெளியேறிய பயணியுடன் தொடர்புகொண்ட நிறுவனம் அவருக்கு நேர்ந்த இச்சூழ்நிலைக்காக தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் பரிசுக் கூடையும் பற்றுச்சீட்டும் அனுப்பவுள்ளது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வாகனமோட்டிகளிடமும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்துள்ளதாகவும் அதற்காக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!