சிங்கப்பூரிலிருந்து வெளியேற ‘மோபைக்’ விண்ணப்பம்

சிங்கப்பூர் சந்தையிலிருந்து 'மோபைக்' நிறுவனம் வெளியேறுகிறது. 'ஓபைக்', 'ஓஃபோ' ஆகிய இரு பெரும் பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதையடுத்து மூன்றாவதாக 'மோபைக்' வெளியேறுகிறது.

நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் வெளியேறுவதற்கான உத்தேச விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

தென்கிழக்காசியாவில் 'மோபைக்'கின் செயல்பாடுகளை நேர்த்திசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையிலிருந்து சுமுகமாக வெளியேற ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது.

தற்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வு நிறுவனமாக உள்ளது மோபைக்.

இந்நிறுவனம் வெளியேறிய பின்னர் 'எஸ்ஜி பைக்ஸ்', 'எனிவீல்' ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இச்சேவையை வழங்கும். இவை இரண்டும் இணைந்து 4,000 சைக்கிள்களை சேவையில் வைத்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!