சிங்கப்பூர் சந்தையிலிருந்து 'மோபைக்' நிறுவனம் வெளியேறுகிறது. 'ஓபைக்', 'ஓஃபோ' ஆகிய இரு பெரும் பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதையடுத்து மூன்றாவதாக 'மோபைக்' வெளியேறுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் வெளியேறுவதற்கான உத்தேச விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
தென்கிழக்காசியாவில் 'மோபைக்'கின் செயல்பாடுகளை நேர்த்திசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தையிலிருந்து சுமுகமாக வெளியேற ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது.
தற்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வு நிறுவனமாக உள்ளது மோபைக்.
இந்நிறுவனம் வெளியேறிய பின்னர் 'எஸ்ஜி பைக்ஸ்', 'எனிவீல்' ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இச்சேவையை வழங்கும். இவை இரண்டும் இணைந்து 4,000 சைக்கிள்களை சேவையில் வைத்துள்ளன.