கதவை மூடாமல் எம்ஆர்டி ரயில் அங் மோ கியோ ரயில் நிலையத்திலிருந்து நகர்ந்தது; நிலைய மேலாளர் பணி நீக்கம்

வடக்கு-தெற்கு ரயில் பாதையில் நேற்று முன்தினம் கதவு திறந்தபடி ஓடிய ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அங் மோ கியோ ரயில் நிலையத்திலிருந்து இயோ சூ காங் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த அந்த ரயிலின் ஒருபக்கக் கதவுகள் திறந்தவாறு இருந்தன.

நேற்று இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததை எஸ்எம்ஆர்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

நிலைய மேலாளர் ரயிலுக்குள் இருந்தார் என்றும் ரயில் கதவு பிரச்சினை ஒன்றைச் சரிசெய்துகொண்டிருந்தார் என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.

கதவைவிட்டுத் தள்ளி பாதுகாப்பாக இருக்கும்படி அவர் சொன்னதாகவும் சுமார் 200 மீட்டர் தூரம் சென்றதுமே ரயில் மீண்டும் அங் மோ கியோ நிலையத்திற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

பயணிகள் பாதுகாப்பாக நிலையத்தில் இறங்கினர்.

நிலைய மேலாளர் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் பணியை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் உடனே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!