கிழக்கு மேற்கு ரயில் சேவையில் தடங்கல்

ரயில் தண்டவாளக் கோளாறினால் இன்று காலை கிழக்கு மேற்கு பெருவிரைவு ரயில் சேவை தடைப்பட்டது.

ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையிலான பயண நேரம் 30 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை 7 மணிக்கு முன்பாக எச்சரிக்கை அளித்தது.

காலை 7 மணிக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் இலவசப் பேருந்து சேவைகள் பயணிகளுக்கு உதவின.

கிளமென்டி ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் கோளாறு ஏற்பட்டதால் கிழக்கு மேற்கு ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாகக் காலை 5.45 மணி அளவில் 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

காலை 8.30 மணி அளவில், ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களின் வழியே செயல்பட்ட இலவசப் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!