டவுன் சின்ட்ரோம் குறைபாடு உள்ள இளையர்கள் சுதந்திரமாக வாழும் வழிமுறைகளைக் கற்றுக் கொள்ள முதலாவது சிறப்பு பயிற்சி நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.
'தி இன்டிபென்டண்ட் லிவிங் அண்ட டிரேனிங் செண்டர்' எனப் படும் அந்த பயிற்சி நிலையம் அடுத்த மாதம் 27ஆம் தேதி தெலுக் பிளாங்கா கிரசெண்டில் திறக்கப்படும் என்று சிங்கப்பூர் டவுன் சின்ட்ரோம் சங்கத்தின் தலைவர் திரு மோசஸ் லீ நேற்று தெரிவித்தார்.
முதல் பயிற்சி வகுப்பில் 24 பேர் பங்கேற்க முடியும். அதில் நிதித் திட்டமிடுதல், தன்னிச்சை யாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளு தல், சுய ஆலோசனை, இனவாத வாழ்க்கை, சமையல் போன்ற வாழ்க்கைத் திறன்கள் பற்றி போதிக்கப்படும்.
அறிவு வளர்ச்சி குன்றியவர்க ளுக்கு வாழ்க்கைத் திறன்களைப் போதிக்கும் இதர நிலையங்கள் இருந்தாலும், டவுன் சின்ட்ரோம் குறைபாடு உடைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இந்த நிலையம் சிறப்பாகச் செயல்படும்.
டவுன் சின்ட்ரோம் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருடன் நேற்றுக் காலை சமூக நடை மேற்கொண்டார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). படம்: ஜஸ்டின் ஃபெர்னான்டோ