பணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை

வீட்டுப் பணிப்பெண்ணைப் பிரம்பால் அடித்து, உதைத்து, சீனி கலந்த சோற்றை உண்ண வைத்து, அதை விழுங்க முடியாமல் அவர் எடுத்த வாந்தியையும் உட்கொள்ளச்செய்த தம்பதியருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த 32 வயது மோ மோ தான் என்பவரை, ஒருமுறை உள்ளாடையுடனும் பணிபுரியச் செய்தனர் அந்த தம்பதியர்.

அவரது நாட்டிலிருந்த குடும்பத்தினரைக் கொலையாளியைக் கொண்டு கொல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

மனைவி 43 வயது சியா யுன் லிங்கிற்கு மூன்று ஆண்டுகள் 11 மாதம் சிறைத் தண்டனையும் $4,000 அபராதமும் இன்று விதிக்கப்பட்டது. பணிப்பெண்ணுக்கு $6,500 இழப்பீடும் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரது கணவர் 41 வயது டே வீ கியெட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பணிப்பெண்ணுக்கு $3,000 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் 31 நாள் விசாரிக்கப்பட்டு, இம்மாதம் 4ஆம் தேதி இருவர் மீதும் குற்றம் பதிவுசெய்யப்பட்டது.

இந்தத் தம்பதி ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களது மற்றொரு பணிப்பெண்ணான 34 வயது ஃபித்பீயாவைத் துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

அந்த வழக்கில் டேவிற்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையும் மனைவிக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!