அமைச்சர் பெயரில் போலிக் கணக்குகள்

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் தமது பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். அந்தப் போலிக் கணக்குகள் குறித்து பொதுமக்கள் தமக்குத் தகவல் தந்ததாக திரு சண்முகம் ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்துள்ளார்.

சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

சமூக ஊடகங்களில் ஒரு கணக்கை நிர்வகிப்பதற்கே அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை, அதிலும் போலிக் கணக்குகளை எப்படிக் கையாள்கின்றனர் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்றும் சொன்னார். முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் தரவேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!