பங்குச் சந்தை 2013ஆம் ஆண்டு வீழ்ந்ததால் சிங்கப்பூரின் பங்குச் சந்தையில் $8 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. இதன் தொடர்பில் பங்குச்சந்தையைத் தங்களுக்குச் சாதமாகக் கையாண்டதற்காக மூவர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவரான கோ ஹின் கால்முக்கு நேற்று 36 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று நிறுவனங்களின் பங்குகளை இவ்வாறு தனக்குச் சாதகமாகக் கையாண்டதன் தொடர்பில் இவர் மீது இருந்த ஆறு குற்றச்சாட்டுகளில் இரண்டை ஒப்புக்கொண்டார். அவருடைய சிறைத் தண்டனை உடனே தொடங்குகிறது.
2013ஆம் ஆண்டு பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமானவருக்கு சிறை
1 mins read
-

