பிள்ளைகளின் கல்விப்பயணத்தில் தரம் பிரித்தலுக்கு ஓர் இடம் இருந்தது'

பிள்ளைகளின் கல்விப்பயணத்தில் தரம் பிரித்தலுக்கு ஓர் இடம் இருந்தது'

1 mins read

பள்ளிகளில் தரம் பிரித்தல் முறையை நீக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதை ஒட்டிப் பேசிய துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், மாணவர்கள் பள்ளிகளை விட்டு பாதியிலேயே செல்லும் எண்ணிக்கையைக் குறைக்கத் தரம் பிரித்தல் முறை ஒரு காலத்தில் கைகொடுத்தது என்றார். அத்துடன் உயர்நிலைப் படிப்பை மாணவர்கள் முடிப்பதை உறுதி செய்வதற்காகவும் தரம் பிரித்தல் உதவியது என்று நேற்று முன்தினம் ஒரு நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.