ஜோகூரில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை - இன்னும் சில ஆண்டுகளில்

சிங்கப்பூரிலிருந்து தண்ணீர் வாங்குவதை மட்டுமே நம்பியிருக்காமல் தனது சொந்த குடிநீர்வளத்தை நிர்வாகிக்க ஜோகூர் மாநிலம் முற்படுவதாக அதன் முதலமைச்சர் ஓஸ்மான் சப்பியான் தெரிவித்திருக்கிறார். தண்ணீர் சுத்திகரிப்புக்கான புதிய ஆலைகள் இதற்கென்றே அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற சிங்கப்பூரை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான யோசனைகளை மாநில அரசாங்கம், மலேசியாவின் மத்திய அரசாங்கத்திடம் பகிர்ந்து வருவதாகத் திரு சப்பியான் கூறினார். "இது பற்றிய சில திட்டங்களை நான் சமர்ப்பித்ததுடன் பிரதமர் மகாதீர் முகம்மதிடம் பேசியும் இருக்கிறேன்," என்றார் திரு சப்பியான்.

அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் ஜோகூரில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூருடன் செய்யப்பட்டுள்ள 1962 தண்ணீர் ஒப்பந்தத்தின்படி, ஜோகூர் ஒரு நாளுக்கு 5 மில்லியன் கெலன் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு கெலன் தண்ணீருக்கு 50 சென் (17 சிங்கப்பூர் காசுகள்) என்ற விலையில் சிங்கப்பூரிடமிருந்து வாங்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!